
கர்நாடக மாநில விவசாயி ஒருவர் ஒரே மாதத்தில் தனது நிலத்தில் பயிரிட்ட தக்காளியை விற்பனை செய்து மூன்று கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சந்திர மௌலி என்ற விவசாயி தனது நிலத்தில் விளைந்த விளைபொருட்களை விற்பனை செய்து பெரிய அளவில் லாபம் ஈட்டாமல் கடந்த பல ஆண்டுகளாக ஏழை விவசாயியாக இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தக்காளி பயிரிட்ட நிலையில் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை அவர் விற்றதாகவும் 32 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட தக்காளியை அவர் விற்பனை செய்ததால் அவருக்கு ஒரே மாதத்தில் ரூபாய் 3 கோடி ரூபாய் லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.
Post a Comment